ADDED : ஏப் 28, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், டைட்டன் இன்ஜினியரிங், ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் ஓசூர் எவரெஸ்ட் அரிமா சங்கம் சார்பில், ஓசூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். டாக்டர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழுவினர், 210 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். அதில், 72 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டீல் நிறுவன சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் சியாம் பிரசாத், பரத்வராஜ், வினோத், தரனேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.