ADDED : ஜூன் 23, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஓசூர் எவரெஸ்ட் அரிமா சங்கம், டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனம் ஆகியவை சார்பில், ஓசூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, அரவிந்த் கண் மருத்துவ-மனை மக்கள் தொடர்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் கதியா அஞ்சலி, சோனாலி தலைமையிலான மருத்-துவக் குழுவினர், 175க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோ-தனை செய்தனர். அதில், 51 பேருக்கு கண்புரை இருப்பது கண்ட-றியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்கு கோவை அனுப்பி வைக்கப்பட்டனர்.