ADDED : ஏப் 21, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், சத்யசாயி சேவா சங்கம் சார்பில், புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
சத்தியநாராயணன் தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர். மொத்தம், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

