/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது: மதியழகன் எம்.எல்.ஏ.,
/
கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது: மதியழகன் எம்.எல்.ஏ.,
கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது: மதியழகன் எம்.எல்.ஏ.,
கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது: மதியழகன் எம்.எல்.ஏ.,
ADDED : நவ 30, 2024 02:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ.,வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு போராடி, உயிர் நீத்தவர்களுக்கு மணி மண்டபம் அமைத்தது தி.மு.க., அரசு. அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும், பெண்கள் முன்-னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததும் தி.மு.க., அரசு. இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்நீத்த, 23 பேருக்கு மணிமண்-டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், அவதுாறு, அநாகரிக பேச்சுகள் தேவையற்றது. கிருஷ்ணகிரியில் கடந்த, 26ல், பா.ம.க., சார்பில் நடந்த போராட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மிரட்டல் தோணியில் பேசி கைதாகியுள்ளார்.
தி.மு.க., அரசு கருத்து சுதந்திரத்தை வழங்கும். ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு, வாய்க்கு வந்த வசைபாட்டுகளையும், மிரட்டல்களையும், வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லோர்க்கும் எல்லாம் என்பதில் சமஉரிமை மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, காழ்ப்புணர்ச்-சியோ, வன்முறையோ தேவையில்லை. இதை பா.ம.க., நிர்வா-கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

