sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

. ரூ.25 லட்சம் கடனை திரும்ப கேட்டு டிரைவரை கடத்திய 5 பேர் கும்பல் கைது

/

. ரூ.25 லட்சம் கடனை திரும்ப கேட்டு டிரைவரை கடத்திய 5 பேர் கும்பல் கைது

. ரூ.25 லட்சம் கடனை திரும்ப கேட்டு டிரைவரை கடத்திய 5 பேர் கும்பல் கைது

. ரூ.25 லட்சம் கடனை திரும்ப கேட்டு டிரைவரை கடத்திய 5 பேர் கும்பல் கைது


ADDED : பிப் 23, 2025 04:12 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், 25 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டு, கார் டிரை-வரை கடத்தி சென்ற, 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்-தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோட்டை உளிமங்க-லத்தை சேர்ந்தவர் வேணுகோபால், 32. பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி, 32, என்பவரிடம், 25 லட்சம் ரூபாய் வாங்கியிருந்தார். அதேபோல், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பலரிடமிருந்து பணத்தை வாங்கி முதலீடு செய்து ஏமாந்தார். அதனால் பணம் வாங்கியவர்களிடம் கொடுக்க முடியவில்லை.

கடந்த ஓராண்டிற்கு முன், வேணுகோபாலுக்கு பணம் கொடுத்த அத்திப்பள்ளியை சேர்ந்த ஒரு கும்பல் அவரை கடத்தி, 25 லட்சம் ரூபாயை திரும்ப வாங்கியது. இதே பாணியில், வேணு-கோபாலிடம் கொடுத்த பணத்தை வாங்க, கேசவமூர்த்தி முடிவு செய்தார். ஆனால், வேணுகோபால் சொந்த ஊருக்கு செல்லாமல் தலைமறைவானதுடன், ஓசூர் ராம்நகரை சேர்ந்த ஒருவரிடம் அடைக்கலம் அடைந்து, அவரது கார் டிரைவராக பணியாற்றி வந்-துள்ளார். இதையறிந்த கேசவமூர்த்தி தன் நண்பர்கள், 4 பேருடன், பலினோ காரில் நேற்று முன்தினம் காலை ஓசூர் வந்தார்.

ஓசூர் பஸ் டிப்போ நுழைவாயில் அருகே மாலை, 5:45 மணிக்கு நடந்து சென்ற வேணுகோபாலை காரில் கடத்தி, 25 லட்சம் ரூபாய் கேட்டு, கேசவமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் தாக்-கினர். இத்

தகவல் ஓசூர் டவுன் போலீசாருக்கு கிடைத்தது. போலீசார் வாகன சோதனையை

தீவிரப்படுத்தினர். ஓசூர் - ராயக்கோட்டை சாலையில், பைரமங்-கலம் கூட்ரோடு பகுதியில், கடத்தல் கும்பல் வருவதை அறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார், காரை தடுத்து நிறுத்தி, வேணுகோபாலை மீட்ட-துடன், கடத்தலில் ஈடுபட்ட, 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது கோட்டை உளிமங்கலம் வேணுகோபால், 32, வெங்கடாஜலபதி, 32, மனோஜ், 23, மணி, 29, கலுகொண்டப்பள்ளி ஹரிஷ், 32, என தெரிந்தது. அவர்களிட-மிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்-பட்டது.






      Dinamalar
      Follow us