ADDED : செப் 01, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; ஓசூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ஸ்ரீதரன் நேற்று முன்தினம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் ரோந்து சென்றார்.
அப்போது சந்தேகத்திற்கிட-மாக ஒரு நபர் சுற்றுவது தெரிந்தது. அவரை தடுத்து சோதனையிட்டதில், அவரது பையில், 1.4 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. விசார-ணையில் அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், தற்போது, ஓசூர் தேவகானப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சோனுகுமார், 24, என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து, ஓசூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
