sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிகிச்சையிலிருந்த சிறுமி மர்ம மரணம் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

/

சிகிச்சையிலிருந்த சிறுமி மர்ம மரணம் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

சிகிச்சையிலிருந்த சிறுமி மர்ம மரணம் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

சிகிச்சையிலிருந்த சிறுமி மர்ம மரணம் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்


ADDED : ஜூலை 30, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சிறுமி உயிரிழந்த நிலையில், சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாதரசனப்பள்ளியை சேர்ந்தவர் முரளி, 42. தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் லட்சுமி, 18, சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டு பிளஸ் 2 படித்தார். கடந்த பிப்., 28ம் தேதி காலை தாய் முனிரத்தினாவுடன், ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றார். அப்போது சூளகிரி ரிங்ரோட்டில், பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், கீழே விழுந்த மாணவியின் வலது கால் மீது லாரி ஏறியது. படுகாயமடைந்த அவருக்கு கடந்த ஏப்., 14ம் தேதி வரை, பெங்களூரு 'நாராயணா இருதாலயா' மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இதற்கு, 14 லட்சம் ரூபாய் செலவானது. ஆம்புலன்ஸில் சென்று பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி லட்சுமி, 397 மதிப்பெண்கள் பெற்றார்.

அதன் பின் ஓசூரில், பழைய பெங்களூரு சாலையிலுள்ள, 'விஜய் மருத்துவமனை'யில் லட்சுமிக்கு தொடர் சிகிச்சை அளித்தனர். இதற்கு, 6 லட்சம் ரூபாய் வரை செலவான நிலையில்,‍ மேலும் அறுவை சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, லட்சுமியின் உடல்நிலை மோசமாகி, வெண்டிலேட்டர் பொறுத்திய நிலையில் இரவு, 8:00 மணிக்கு உயிரிழந்தார்.

தவறான சிகிச்சை மற்றும் ஓவர் டோஸ் மருந்தால் தான், லட்சுமி இறந்ததாக குற்றம்சாட்டி, அவரது சடலத்தை வாங்க மறுத்து நேற்று, மருத்துவமனை முன், பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு, மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் வாகரே, டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுமி

யின் சடலத்தை, ஓசூர் அரசு மருத்துவ

மனைக்கு அனுப்பி வைத்தனர்.

'விஜய் மருத்துவமனை' டாக்டர்கள் ராஜதுரை, ரமேஷ் ஆகியோர் கூறுகையில், ''சிறுமியின் காயம் குறித்து பெற்றோரிடம் ஒவ்வொரு முறையும் தெரிவித்தோம். அவருக்கு ஹீமோகுளோபின், புரோட்டின் குறைந்து விட்டது. காயத்தில் நோய் தொற்று ஆகி விட்டது. சில நாட்களுக்கு முன், வேறு மருத்துவமனைக்கு செல்ல கூறினோம். வேறொரு தனியார் மருத்துவமனை டாக்டரிடமும் சிகிச்சைக்கு பேசினோம். நேற்று மாலை அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து, இதய துடிப்பு பாதித்தது. வெண்டிலேட்டரில் வைத்தோம். மீண்டும் வேறு மருத்துவமனைக்கு செல்ல கூறியும் அவர்கள் சம்மதிக்கவில்லை,'' என்றனர்.






      Dinamalar
      Follow us