sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இறந்த கருவுடன் தப்பிய சிறுமி கண்டுபிடித்து கருக்கலைப்பு

/

இறந்த கருவுடன் தப்பிய சிறுமி கண்டுபிடித்து கருக்கலைப்பு

இறந்த கருவுடன் தப்பிய சிறுமி கண்டுபிடித்து கருக்கலைப்பு

இறந்த கருவுடன் தப்பிய சிறுமி கண்டுபிடித்து கருக்கலைப்பு


ADDED : ஆக 20, 2025 11:26 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்:இறந்த கருவுடன் சுற்றித்திரிந்த சிறுமிக்கு, போலி ஆதார் கார்டு தயார் செய்து கொடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே வசிக்கும் 15 வயது சிறுமிக்கு திருமணமாகி, ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம், 21ம் தேதி, நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், தனக்கு 20 வயதாவதாக கூறி பரிசோதனை செய்தார்.

கடந்த, 12ம் தேதி, முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தில் பதிய, அவரின் ஆதார் அடையாள அட்டை எண்ணை, செவிலியர்கள் பெற்றனர். அந்த எண்ணை ஆன்லைனில் பதிவு செய்தபோது, அந்த சிறுமியின், உண்மையான பிறந்த தேதி, 2010 என்பதும், அஜித் என்பவருடன் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததும் தெரிந்தது.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில், கடந்த, 13ம் தேதி ஸ்கேன் செய்த போது, சிறுமியின் வயிற்றில், இதய துடிப்பு இல்லாமல், இறந்த நிலையில் கரு இருந்தது தெரிந்தது. சிறுமியை தேடிய போது, ஒரு வாரமாக மருத்துவக் குழுவினர் கண்ணில் படாமல் தப்பினார்.

கெலமங்கலம் மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் சிறுமியை கண்டுபிடித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கருக்கலைப்பிற்கு அனுப்பினர். அந்த சிறுமிக்கு, போலியான ஆதார் கார்டு தயார் செய்து கொடுத்த, டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளரை கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us