/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
/
தர்மபுரியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ADDED : ஆக 11, 2025 08:06 AM
தர்மபுரி: திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், தர்மபுரி, வாசுகவுண்டர் வீதியில், செந்தில்குமார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே, சாந்தி ஹார்டுவேர்ஸ் எதிரில், ஜே.ஆர்., காம்ப்ளக்ஸ் நெ.7, 2வது மாடியில், இ.பி.ஆர்., எஜூகேஷன் பாயின்ட் பயிற்சி மையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் ஆக., 18 முதல், 27ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி நிறைவில், இந்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகைக்கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ், மற்றும், 7,900 ரூபாய் பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்கள் பெற, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

