sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மத்துாரை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்கள்

/

மத்துாரை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்கள்

மத்துாரை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்கள்

மத்துாரை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்கள்


ADDED : ஜூலை 09, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி- - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்து, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதில், கிருஷ்ணகிரி அடுத்த, மத்துார் பகுதி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மக்கள், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லவும், தர்மபுரி, திருப்பத்துார் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து மத்துாருக்கு வரும் மக்கள், இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லவும், ஒரு ஜங்ஷன் பகுதியாக மத்துார் உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி - -திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும், விழுப்புரம், சேலம் கோட்ட அரசு பஸ்கள், மத்துாருக்குள் வராமல், புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது.

இதனால் மத்துார் பஸ் ஸ்டாண்டில், தினமும் காலை நேரங்களில் அரசு பணிகள், அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்லும் மக்கள், மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us