ADDED : ஜூன் 11, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டையை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 6ல் இரவு, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார்.
அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரி தாலுகா, பூவதி அருகே கோட்டூரை சேர்ந்த அம்மாசி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.