sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதி

/

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதி

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதி

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதி

2


ADDED : ஜூன் 01, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:52 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 வகுப்புகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிக நியமனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடப்பாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களால், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியுள்ளன. இதற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க, பல மாதங்கள் அவகாசம் தேவைப்படும். அதேபோல் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பள்ளிகளில் மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிக்கல் உருவானது.

இதை கருத்தில் கொண்டு, பள்ளி தொடங்கும் முன், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, கடந்த, 28ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முழு கல்வி தகுதி கொண்ட ஆசிரியர்களை புகார் எழாதபடி நியமித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது நிருபர்






      Dinamalar
      Follow us