/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மாநில கபடி போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : செப் 29, 2025 02:12 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில கபடி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். 2025 - 2026ம் கல்வி ஆண்டிற்கான இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம், சேலம் மண்டல அளவிலான ஆண்களுக்கான கபடி தெரிவு போட்டி, தர்மபுரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவன் ஆகாஷ், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும், 8ம் வகுப்பு மாணவன் திருப்பதி, 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும் நடந்த போட்டியில் பங்கேற்று தேர்வாகி உள்ளனர்.
இவர்கள் பெரம்பலுார் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். தேர்வான மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகன்ஜீவன்ராம், ஜெகன்குட்டிமணி ஆகியோரையும், தலைமையாசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி உள்ளிட்ட ஆசிரியர்கள், பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.