ADDED : ஜூன் 05, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, சூளகிரி தாலுகா, காமன்தொட்டி வி.ஏ.ஓ., சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கோபசந்திரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், கோபசந்திரத்தில் இருந்து ஓசூருக்கு, 4 யூனிட் ஜல்லி கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.