/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் பனியுடன் கூடிய சாரல் மழை
/
கிருஷ்ணகிரியில் பனியுடன் கூடிய சாரல் மழை
ADDED : டிச 17, 2025 07:59 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், நேற்று பனியுடன் கூடிய சாரல் மழை பெய்-ததால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக குளிர் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை, 5:00 மணி முதல் காலை, 10:00 மணி வரை மூடுப-னியும், கடும் குளிரின் தாக்கமும் நிலவுகிறது. 10:00 மணிக்கு மேல் சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் உள்ளது. நேற்று காலை முதல் பனி பெய்த நிலையில், வானம் மேகமூட்-டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 2வது நாளாக நீர்-வரத்து, 540 கனஅடியாக இருந்தது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நீர்மட்டம், 48.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மூலம், 186 கனஅடியும், தென்-பெண்ணை ஆற்றில், 586 கனஅடி மொத்தம், 772 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பாரூர் ஏரி மொத்த உயரமான, 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 18 கனஅடி நீர் கால்-வாயில் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு வந்து கொண்டிருக்கும், 30 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்-ளது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில், 17.60 அடியாக நீர்மட்டம் இருந்தது.

