sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

/

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்


ADDED : மே 31, 2025 06:51 AM

Google News

ADDED : மே 31, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சீசனுக்கு முன்பே பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருவதுடன், வெப்பமும் தணிந்துள்ளது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது பெய்த சாரல் மழையால் குளுகுளு சீதோஷ்ணநிலை நிலவியது. இதையடுத்து கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி படகு இல்லத்தில், குடும்பத்தினருடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இன்னும் சில தினங்களில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில், நேற்று மாலை, குழந்தைகளுடன் கடைவீதிகளில் குவிந்த மக்கள், பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கினர். தர்மபுரியிலும் நேற்று காலை முதலே வெயில் இல்லாமல், கருமேகங்களுடன் குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us