sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

/

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி


ADDED : பிப் 04, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், இந்தாண்டு மார்கழி மாதத்தில் லேசான பனிப்பொழிவு மட்டுமே இருந்த நிலையில், தை மாத பிறப்புக்கு பிறகு கிருஷ்ணகிரியில், காலை, மாலை கடுமையான பனியும், பகலில் கடுமையான வெப்பமும் பொதுமக்களை வாட்டி வருகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும், சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும்

பனிப்பொழிவும், பனி மூட்டமும் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி,

மெதுவாக வாகனங்களை இயக்கினர். கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை

பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சாலையோரம் இருந்த பொதுமக்கள் பலர் தீயை மூட்டி குளிர் காய்ந்தனர். ஏற்கனவே

பொதுமக்கள் பலர் கடந்த, 15 நாட்களாக பனியால் சளி, இருமல், தொண்டை வலி உள்-ளிட்ட பல்வேறு

உபாதைகளால், சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில், நேற்று பெய்த பனியால் மேலும் சிரமப்பட்டனர். காலை,

9:00 மணிக்கு பின்னரே பனியின் தாக்கம் குறைய தொடங்கியது.






      Dinamalar
      Follow us