/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்
ADDED : பிப் 08, 2026 08:18 AM

கிருஷ்ணகிரி; பர்கூர் அரசு கலை கல்லுாரி முன், கோரிக்கை-களை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் கல்லுாரியில் கவுரவ விரிவுரை-யாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். பேராசி-ரியர்கள் அன்பழகன், உமா மகேஸ்வரி உள்-ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக நிதி நல்கை குழு பரிந்துரைத்த மாத ஊதியம், 57,700 ரூபாய் வழங்க வேண்டும். பி.எப்., - இ.எப்., பிடித்தம் வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணிக்கொடையாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரசு தங்கள் கோரிக்-கைகளை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்-தினால், பணி புறக்கணிப்பு போராட்டமாக தொடரும் எனக்கூறினர்.

