/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பகுதி நேர ரேஷன் கடை முருக்கம்பள்ளத்தில் திறப்பு
/
பகுதி நேர ரேஷன் கடை முருக்கம்பள்ளத்தில் திறப்பு
ADDED : பிப் 08, 2026 08:17 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பாலேப்-பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட முருக்கம்பள்ளத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செய-லாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து வைத்து பேசியதாவது:
இப்பகுதி மக்கள், வரட்டனப்பள்ளி ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் நிலை இருந்தது. ரேஷன் பொருட்கள் வாங்க, 4 கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளதால் முருக்-கம்பள்ளத்தில் ரேஷன் கடை திறக்க, நீண்ட கால-மாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தற்-போது, வரட்டனப்பள்ளி ரேஷன் கடையிலிருந்து பிரித்து, முருக்கம்பள்ளத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
பர்கூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்-திரன், அறிஞர், காந்தி, வெண்ணம்பள்ளி ரவிச்சந்-திரன், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

