/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் விபத்து அபாயத்தில் பொதுமக்கள்
/
திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் விபத்து அபாயத்தில் பொதுமக்கள்
திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் விபத்து அபாயத்தில் பொதுமக்கள்
திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் விபத்து அபாயத்தில் பொதுமக்கள்
ADDED : பிப் 17, 2025 02:26 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரியில், சென்னை தேசிய நெடுஞ்சாலை தண்டே-குப்பம் அருகில், சர்வீஸ் சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத்
துறையினர் பெரிய அளவில் சாக்கடை கால்வாய் அமைத்துள்-ளனர். இங்கு புதிய மேம்பாலம் கட்டியபோது, சாக்கடை கால்-வாயை நீட்டித்து, பில்லர் அமைத்தனர். ஆனால், பாலம் கட்டும் பணி முடிந்ததும், இக்கால்வாய் கட்டுமான பணியை முடிக்-காமல் விட்டு விட்டனர். இதனால் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு, திறந்தவெளியில் கால்வாய் உள்ளதால்,
பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இக்கால்வாய் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைத்துறை-யினர் சிமென்ட் சிலாப் கற்களால் மூடி வைத்துள்ள நிலையில், இப்பாலம் அருகில், 4 இடங்களில், 10 அடி அகலத்திற்கு மூடாமல் திறந்தவெளியில் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் மீது இரவில் நடந்து செல்வோர் தவறி விழுந்தால் பெரும் அசம்பா-விதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த கால்வாய் மீது, பாதியில் விட்டுள்ள தரைப்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும், 4 இடங்களில் திறந்தவெளியாக உள்ள கால்வாய் மீது சிமென்ட் சிலாப் அமைத்து மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

