/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழிலாளர் நலநிதியை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
/
தொழிலாளர் நலநிதியை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
தொழிலாளர் நலநிதியை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
தொழிலாளர் நலநிதியை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 18, 2024 01:49 AM
கிருஷ்ணகிரி: தொழிலாளர் நல நிதியை தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு தொழிலாளர் நல சட்டப்படி, தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறு-வனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒவ்-வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும், 60 ரூபாய் என கணக்கிட்டு, நிறுவ-னத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொழிலாளர் நலநிதியை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இந்த ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும், 2025 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்-களை சார்ந்தோர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்-டங்கள் வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, 1,000 முதல், 12,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற வரும், டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தொழி-லாளர் நலவாரிய அலுவலகம் அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.