/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜோகுலுார் மாரியம்மன்கோவில் திருவிழா
/
ஜோகுலுார் மாரியம்மன்கோவில் திருவிழா
ADDED : ஏப் 22, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்கூர்:பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியிலுள்ள ஜோகுலுார் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜையுடன் துவங்கிய விழாவில், ஜோகுலுார் மாரியம்மனுக்கு பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தனர்.
கோவில் பூசாரி பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து ஜோகுலுார் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஜோகுலுார் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.