sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிய காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட்

/

டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிய காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட்

டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிய காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட்

டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிய காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட்


ADDED : பிப் 07, 2024 11:55 AM

Google News

ADDED : பிப் 07, 2024 11:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சுற்றிலும் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிருஷ்ணகிரி, பெங்களூரு, சென்னை, தர்மபுரி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்ல காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். அதன்படி, கிராமத்தில் இருந்து டூவீலரில் வரும் பொதுமக்கள், வாகனங்களுக்கான ஸ்டாண்டில் டூவீலர் மற்றும் கார்களை நிறுத்தாமல், பஸ் ஸ்டாண்டின் உள்ளே பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்திவிட்டு நாள் கணக்கில் வெளியூர் சென்று விடுகின்றனர். மேலும் சரக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகள் போன்றவற்றையும் நிறுத்தி வைக்கின்றனர்.

இதனால், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளதால், பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளே செல்லவும், வெளியேறவும் முடியாமல், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமப்படுவதோடு, பள்ளி, கல்லுாரி மாணவிகள் மற்றும் வயதான பெரியவர்கள் பஸ்சில் ஏறவும், இறங்கி வெளியேறவும் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல முறை பேரூராட்சியில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us