/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கேதார கவுரி விரதம்: அதிரசம் படைத்து பக்தர்கள் வேண்டுதல்
/
கேதார கவுரி விரதம்: அதிரசம் படைத்து பக்தர்கள் வேண்டுதல்
கேதார கவுரி விரதம்: அதிரசம் படைத்து பக்தர்கள் வேண்டுதல்
கேதார கவுரி விரதம்: அதிரசம் படைத்து பக்தர்கள் வேண்டுதல்
ADDED : நவ 02, 2024 04:15 AM
கிருஷ்ணகிரி: கேதார கவுரி விரதத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பெண்கள் அதிரசம் படைத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, சிவபெருமானை தொடர்ந்து, 21 நாட்களுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட வேண்டும்.நேற்று, கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோவில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்களில், பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தைக் கொண்டு சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர். இதே போல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர். கவுரி அம்மனுடன் சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

