/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி, தர்மபுரி தி.மு.க., கிழக்கு, மேற்கு வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்
/
கிருஷ்ணகிரி, தர்மபுரி தி.மு.க., கிழக்கு, மேற்கு வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி, தர்மபுரி தி.மு.க., கிழக்கு, மேற்கு வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி, தர்மபுரி தி.மு.க., கிழக்கு, மேற்கு வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 30, 2024 02:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட தி.மு.க., கிழக்கு, மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம், நேற்று கிருஷ்ண
கிரியில் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். சட்டத்துறை இணை செயலர் தாமரைச் செல்வன், சட்-டத்துறை துணை செயலர் மருது கணேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர்கள் பிரகாஷ் எம்.எல்.ஏ., பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி மற்றும் ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், 2025 ஜன., 12ல், சென்னையில் தி.மு.க., சட்டத்து-றையின் சார்பில் நடக்கும், 3வது மாநில மாநாட்டில் கிருஷ்ண-கிரி, தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பில், 500 வழக்கறிஞர்கள் பங்கேற்பது.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில், 40 தொகுதிகளில் வெற்றி பெற அயராது பாடுபட்ட தமிழக முதல்வர், துணை முதல்வ-ருக்கு நன்றி தெரிவிப்பது. தி.மு.க.,
சட்டத்துறையில், வழக்கறிஞர் அணியில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணியை தீவிரமாக செய்ய வேண்டும். அரூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், போச்சம்பள்ளியில் சார்பு நீதி-மன்றம் அமைக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் சேமநல நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. 2026 சட்டசபை தேர்தலில், 200 இடங்களில் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக தேர்தல் பணியாற்றி, 7வது முறையாக, ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவது என்பன உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

