sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி செய்திகள்

/

கிருஷ்ணகிரி செய்திகள்

கிருஷ்ணகிரி செய்திகள்

கிருஷ்ணகிரி செய்திகள்


ADDED : ஏப் 15, 2024 03:58 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டு துப்பாக்கியுடன்

சுற்றிய 2 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை போலீசார், கொல்லகொட்டாய் அருகே உள்ள படத்தானுாரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, 2 பேரை சோதனை செய்ததில், அவர்கள் ஒரு நாட்டுத்துப்பாக்கியும், 2 பேட்டரிகளும் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் படத்தானுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 45, திருப்பத்துார் அங்கநாதன்வலசை பகுதியை சேர்ந்த தேவேந்திரன், 65, என்பதும், அவர்கள் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்ஓசூரில் வீடுகளில் துண்டு பிரசுரம்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 6 வது வார்டுக்கு உட்பட்ட கே.சி.சி., நகரில் கடந்த, 3 மாதமாக குடிநீர் பிரச்னை உள்ளது. டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம், பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக, கே.சி.சி., நகர் அசோசியேஷன் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் சினேகாவிடம் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று, தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்த கே.சி.சி., நகர் பகுதி மக்கள், ஒன்று கூடி ஆலோசனை செய்து, தங்கள் வீடுகள் முன், 'நோ தண்ணீர், நோ ஓட்டு' என துண்டு பிரசுரத்தை ஒட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us