sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் திருவிழா

/

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் திருவிழா

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் திருவிழா

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் திருவிழா


ADDED : ஜன 17, 2024 11:40 AM

Google News

ADDED : ஜன 17, 2024 11:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று, மாட்டு பொங்கலையொட்டி, எருது விடும் திருவிழா நடந்தது. மாலை, 4:30 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓட விட்டனர். இதை பார்க்க ஏராளமானோர் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்தனர். பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்து பார்வையாளர்களை கீழே தள்ளியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகினர். இதே போல், பழையபேட்டை மேல்தெருவில், 50க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர்.

கிருஷ்ணகிரி அடுத்த சின்னேப்பள்ளி, கிட்டம்பட்டி மற்றும் சிந்தகம்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று எருது விடும் திருவிழா நடந்தன. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளை கொண்டு வந்திருந்தனர். எருது விடும் விழாவைக்காண ஏராளமானோர் வந்திருந்தனர்.






      Dinamalar
      Follow us