sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணையிலிருந்து 2ம் போக சாகுபடிக்கு நீர்திறப்பு

/

கே.ஆர்.பி., அணையிலிருந்து 2ம் போக சாகுபடிக்கு நீர்திறப்பு

கே.ஆர்.பி., அணையிலிருந்து 2ம் போக சாகுபடிக்கு நீர்திறப்பு

கே.ஆர்.பி., அணையிலிருந்து 2ம் போக சாகுபடிக்கு நீர்திறப்பு


ADDED : டிச 19, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 19, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 19-

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலம், நேற்று முதல், வரும், 2025 ஏப்., 16 வரை, 120 நாட்களுக்கு, தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் நீரை திறந்து வைத்து, மலர் துாவினர்.

பின்னர், மாவட்ட கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு, 151 கன அடி என, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், 16 பஞ்.,ல் உள்ள, 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் தற்போது, 51.30 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு, 475 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து, 463 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜமோகன்

உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us