/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரி உபரி நீர் கால்வாய்களில் கழிவுகள்; கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை
/
ஏரி உபரி நீர் கால்வாய்களில் கழிவுகள்; கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை
ஏரி உபரி நீர் கால்வாய்களில் கழிவுகள்; கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை
ஏரி உபரி நீர் கால்வாய்களில் கழிவுகள்; கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை
ADDED : டிச 13, 2024 09:03 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி-களில் உள்ள சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி உள்-ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சின்னஏரி நிரம்பிய நிலையில், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற-வில்லை. இது குறித்து தகவலறிந்த நகராட்சி தலைவர் பரிதா நவாப், கமிஷனர் கிருஷ்ண-மூர்த்தி அங்கு சென்றனர். லண்டன்பேட்டை அருகே உள்ள சின்ன ஏரி உபரி நீர் கால்வாயில் உள்ள கழிவுகளை பொக்லைன் மூலம் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
ஏரி உபரி நீர் கால்வாய்களில் தொடர்ந்து டீக்-கடை கழிவுகள், ஓட்டல் கடை கழிவுகளை கொட்-டுவதால், உபரி நீர் செல்ல முடியாத நிலை உள்-ளது. எனவே, டீக்கடை கழிவுகள், ஓட்டல் கழிவு-களை, ஏரி உபரி நீர் கால்வாய்களில் கொட்ட வேண்டாம். மீறி கொட்டுபவர்கள் யார் என்பதை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.