sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேட்டியம்பட்டி மாரியம்மன்‍ கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

/

வேட்டியம்பட்டி மாரியம்மன்‍ கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

வேட்டியம்பட்டி மாரியம்மன்‍ கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

வேட்டியம்பட்டி மாரியம்மன்‍ கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்


ADDED : ஜூன் 05, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில் அமைந்துள்ள நவசக்தி விநாயகர், மகாசக்தி மாரியம்மன், சத்தியம்மன், சித்திரக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று ஊர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த மாதம், 26 முதல் மதியம், 1:00 மணிக்கு, கோவிலில் பெண்கள் கூழ் ஊற்றி வந்தனர். 29 முதல், நேற்று வரை, 7 நாட்கள் ஆட்டாங்கோல் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி, இரவு அம்மன் ஊர்வலமும், வானவேடிக்கையும் நடந்தது.

நேற்று காலை, பொன்கூடை எடுத்தல் நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மேள தாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அம்மனுக்கு மாவிளக்கை படைத்து, சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், 300க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 50க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டு பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.

மேலும் அசைவ உணவு சமைத்து விருந்தினருக்கும், உறவினருக்கும் பரிமாறி மகிழ்ந்தனர். மதியம், 2:00 மணிக்கு, கந்தல் பெரியப்பன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்று வழிபட்டனர்.

இன்று மதியம், கிராமத்தில் ஊர் மாடு விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us