ADDED : டிச 16, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி தாசில்தார் மோகன்தாஸ் மற்றும் வருவாய்த்துறை ஊழி-யர்கள், ஓசூர் - ராயக்கோட்டை சாலையிலுள்ள உத்தனப்பள்ளி ஆர்.ஐ., குடியிருப்பு அருகே வாகன சோதனை செய்தனர்.
அவ்-வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 கறுப்பு கிரானைட் கற்களை உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஏற்றி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்-தனர். உத்தனப்பள்ளி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

