ADDED : ஜூலை 07, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், பேரிகை அடுத்த புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, புக்கசாகரத்தில் இருந்து, ஓசூருக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் ஜல்லியை கொண்டு செல்வது தெரிந்-தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.