ADDED : நவ 20, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை, சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையில் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலத்திற்கு, 5 யூனிட் ஜல்லி கற்களை ஏற்றி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். பாரதி புகார் படி, லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

