ADDED : ஆக 13, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர் அருகே கல்லுப்பள்ளி பிரிவு சாலையில், ஈச்சங்கூர் வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது,
கக்கனுாரிலி-ருந்து பெங்களூருக்கு, அரசின் தடையை மீறி, 6 யூனிட் எம்.சாண்டை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், நல்லுார் போலீசில் ஒப்படைத்-தனர். வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் புகார் படி, லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
