/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றவர் கைது
/
மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றவர் கைது
ADDED : அக் 25, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், பூனதனள்ளியை சேர்ந்தவர் சந்திரன், 62, கூலித்தொழிலாளி.
இவரது 2வது மனைவி கோவிந்தம்மாள், 45, என்பவரை கடந்த, 16ல், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே வைத்து கொலை செய்து விட்டு சந்திரனும் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாரூர் போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தம்மாளின் சடலத்தை மீட்டனர்.சந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த நிலையில், சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து சந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

