sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு 'சிறை'

/

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு 'சிறை'

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு 'சிறை'

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு 'சிறை'


ADDED : ஏப் 06, 2025 02:35 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, பெண்ணிடம், நகை பறிக்க முயன்றவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, மட்டாரப்பள்ளியை சேர்ந்தவர் சுதா, 35. இவர் கடந்த, 2022 பிப்., 7ல் தன் ஸ்கூட்டியில், கொண்டப்பநாயனப்பள்ளி அருகே சென்றார். அப்போது, அவ்வழியாக மற்றொரு ஸ்கூட்டியில் வந்த நபர், சுதா அணிந்திருந்த, 2 பவுன் சங்கிலியை பறித்து, தப்ப முயன்றார். அவரை, அருகிலிருந்தவர்கள் மடக்கி பிடித்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த காவேரிப்பட்டை சேர்ந்த தர்மலிங்கம், 45 என தெரிந்தது. அவரை, பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி மோகன்ராஜ், குற்றம்சாட்டப்பட்ட தர்மலிங்கத்திற்கு, 7 ஆண்டுகள் சிறை, மற்றும், 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால், மேலும் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us