தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நாளை நிறைவு

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நாளை நிறைவு

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நாளை நிறைவு


ADDED : ஜூலை 19, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியில் நடந்து வரும், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளையுடன் (20ம் தேதி) நிறைவு பெறுகிறது.

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள திடலில் கடந்த ஜூன், 21- முதல், 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நாளை (20-ம் தேதி) மாலை, 6:00 மணியளவில் கண்காட்சி அரங்கில் நடைபெறுகிறது. சிறந்த முறையில் அரங்கம் அமைத்த அரசுத்துறை அலுவலர்கள், சிறந்த 'மா' சாகுபடி விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நிறைவு நாளில் நடைபெறும் நாய்கள் கண்காட்சியில், அரிய வகை நாய் இனங்கள் பங்கு பெற உள்ளன. நாளை காலை 11:30 முதல் 12:30 வரை போட்டியில் பங்கேற்கும் நாய்களுக்கான முன்பதிவு, நாய்கள் காட்சிப்படுத்துதல், 12:30 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டுமென மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us