sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில்கள் திருவிழா; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

/

தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில்கள் திருவிழா; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில்கள் திருவிழா; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில்கள் திருவிழா; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


ADDED : ஜூலை 25, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை சந்தை மைதானத்தில் உள்ள உத்தண்டி மாரியம்மன், அண்ணா நகர் சேலத்து மாரியம்மன், தேர்ப்-பேட்டை மந்தை மாரியம்மன், ஜெய் தெரு ஓம் சக்தி மாரி-யம்மன், மேல்கோட்டை மாரியம்மன், அர்த்தக்கூர் மாரியம்மன் கோவில்கள் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

சேலத்து மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், சந்தை மைதானம் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாலை, 6:00 மணிக்கு தேவராஜ் ஏரியில் கங்கா பூஜை, இரவு, 8:30 மணிக்கு பூ மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் நேற்று காலை, 8:00 மணிக்கு உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம்சக்தி அம்மன், மேல்கோட்டை மாரி-யம்மன் உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து, மாவி-ளக்கு ஏந்தியும், வாய், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கிய-படியும், வாகனங்களை இழுத்தபடியும், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை மந்தை மாரி-யம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அங்கு பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தேன்க-னிக்கோட்டை நகரம் விழாக்கோலம் பூண்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us