ADDED : ஆக 21, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதியில், கடந்தாண்டு இறுதி மற்றும் நடப்பாண்டு துவக்கத்தில் அதிகளவில் பைக் திருட்டு நடந்தன.
இந்த வழக்குகளில் ஏற்கனவே, 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை அருகே, வன்னியபுரத்தை கட்டட மேஸ்திரி சக்திவேல், 38, என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரை தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது மொத்தம், 5 பைக் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.