ADDED : ஜூலை 06, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மனஹள்ளியை சேர்ந்தவர் மாதேஷ், 48. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் தங்கி, கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:40 மணிக்கு, ஹோண்டா சைன் பைக்கில், தளி - ஓசூர் சாலையில் சென்றார்.
பூனப்பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாதேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.