sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கட்சியினர் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப ஊடக சான்றளிப்பு குழு அனுமதி அவசியம்

/

கட்சியினர் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப ஊடக சான்றளிப்பு குழு அனுமதி அவசியம்

கட்சியினர் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப ஊடக சான்றளிப்பு குழு அனுமதி அவசியம்

கட்சியினர் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப ஊடக சான்றளிப்பு குழு அனுமதி அவசியம்


ADDED : ஏப் 01, 2024 04:07 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஊடக சான்றழிப்பு குழுவின் முன் அனுமதி பெற்ற பின்னரே, அரசியல் கட்சி, வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களை, உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

லோக்சபா பொதுத்தேர்தல் நடக்க உள்ளதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, உள்ளூர் தொலைக்காட்சி ஒளிப்பரப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் முன் அனுமதி பெற்ற பின்னரே அரசியல் கட்சி, வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களை, உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும்.

ஊடக சான்றளிப்பு குழுவினர், விளம்பரத்தை பார்வையிட்டு, ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை நீக்கம் செய்து, வெளியிட அனுமதி அளிப்பர். செலவு விபரங்கள், செலவின உதவி பார்வையாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டு, வேட்பாளரின் செலவு கணக்கு பதிவேடுகளில் பதியப்படும். மேலும், அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம், ஒளிபரப்பாகி வரும், உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பும் கண்காணிக்கப்படுகிறது. கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒளிபரப்பு விபரங்களை பதிவேடுகளிலும் பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us