/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு
ADDED : பிப் 08, 2024 05:49 PM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று( பிப்.,08) மதியம் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் மதியம், 12:53 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோவிலும் உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி அருகிலுள்ள வனப்பகுதியில், லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதியில் அதிகாரிகள் சென்றுள்ளனர். லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. இது குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை” என்றார்.

