sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 09, 2024 07:40 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஒட்டப்பட்டி ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

இதில், பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி, பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 54 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். பாலின் தரத்தை கணக்கிட கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள், 8.2, கொழுப்பு சத்து, 4.3 உள்ளதை, 8.0 மற்றும், 4.0 என கணக்கிட்டு கொள்முதல் செய்ய வேண்டும்.

கடந்த, 2017 அக். 25ல் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு தீர்ப்பின்படி, ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக, பாலின் அளவையும், தரத்தையும் குறித்து கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை இலவச தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மாநில பொதுச் செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சக்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

* நாகரசம்பட்டி அடுத்த, ஒட்டப்பட்டி கிராமத்திலுள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கம் முன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் அண்ணாமலை, நாகரசம்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் கடல்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us