sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாநில கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசளிப்பு

/

மாநில கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசளிப்பு

மாநில கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசளிப்பு

மாநில கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசளிப்பு


ADDED : டிச 01, 2025 02:54 AM

Google News

ADDED : டிச 01, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சர் சக்கரபாணி பரிகளை வழங்-கினார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஓசூரில் மாநில அளவிலான கபடி போட்டி மூன்று நாட்கள் நடத்தப்பட்-டன. இதில், 38 மாவட்டங்களிலிருந்து மொத்தம், 40 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அணியினர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார்.ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கரூர் அணிக்கு, 1.50 லட்சம் ரூபாய், இரண்டாமிடம் பெற்ற சென்னை அணிக்கு, 1 லட்சம் ரூபாய், மூன்று மற்றும் நான்காமிடம் பெற்ற கன்னியாகு-மரி, திருச்சி அணிகளுக்கு தலா, 50,000 ரூபாய், பெண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களை பெற்ற கரூர், அரியலுார், சென்னை, திருவண்ணாமலை அணிகளுக்கு, தலா, 50,000 பரிசுத்-தொகை மற்றும் கோப்பையை, அமைச்சர் சக்கரபாணி வழங்-கினார். தமிழக ஆண்கள் அணிக்கு, 20 வீரர்கள் தேர்வு செய்யப்-பட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us