sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் சேவை

/

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் சேவை

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் சேவை

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் சேவை


ADDED : மார் 14, 2024 06:48 AM

Google News

ADDED : மார் 14, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், நபார்டு வங்கி நிதியுதவியுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், நடமாடும் வங்கி சேவைக்கான மொபைல் வாகனத்தை மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'கூட்டுறவு கடன் சங்கங்களின் வாடிக்கையாளர்களிடம், கடன் சேவைகள், இட்டுவைப்புகள் தொடர்பான வட்டி விளம்பரங்கள் மற்றும் நிதிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் வங்கி சேவைக்கான மொபைல் வாகன சேவை துவங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக அவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று, வங்கியியல் சேவை மூலம் பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதர வங்கி கணக்குதாரர்களும், ஏ.டி.எம்., டெபிட் கார்டு மூலமாகவோ, பயோ மெட்ரிக் முறையிலோ பணம் எடுக்கலாம். வேறு யாருக்கும் பணமும் அனுப்பலாம். இச்சேவையால் அனைத்து தரப்பினரும் பயன்பெறலாம்' என்றனர்.தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us