sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த வெண்ணெய் பறிமுதல்

/

பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த வெண்ணெய் பறிமுதல்

பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த வெண்ணெய் பறிமுதல்

பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த வெண்ணெய் பறிமுதல்


ADDED : டிச 06, 2024 07:56 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அடுத்த கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், ஏ.எம்.எஸ்., மில்க் புராடக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற முறையில், பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நெய் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்து மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், சுகாதாரமற்ற டிரம்களில், 125 கிலோ அளவில் பூஞ்சை பிடித்த நிலையில் வெண்ணெய், பட்டர் கிரீம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை உடனடியாக அழித்தனர். மேலும் அங்கிருந்து, நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி, நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட கலெக்டரின் உத்தரவையடுத்து, ஓசூர் சுற்றுவட்டாரத்தில் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்திய போதும், கிருஷ்ணகிரியில் நிறுவனங்களிலோ, ஓட்டல்களிலோ, ரோட்டோர கடைகளிலோ உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தவில்லை என்பதால், மாவட்ட நிர்வாகம் விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us