sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிணற்றில் விழுந்த குட்டி‍யை மீட்க தாய் யானை பாச போராட்டம்

/

கிணற்றில் விழுந்த குட்டி‍யை மீட்க தாய் யானை பாச போராட்டம்

கிணற்றில் விழுந்த குட்டி‍யை மீட்க தாய் யானை பாச போராட்டம்

கிணற்றில் விழுந்த குட்டி‍யை மீட்க தாய் யானை பாச போராட்டம்


ADDED : ஏப் 10, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், நொகனுார் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 27க்கும் மேற்பட்ட யானைகள், பயிர்களை சேதப்படுத்தின. அவற்றை, தமிழக எல்லையான ஜவளகிரி நோக்கி, நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் விரட்டினர்.

அகலக்கோட்டை அருகே, குண்டாலம் கிராமத்திலுள்ள விவசாய நிலம் வழியாக நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு யானைகள் சென்றபோது, 20 அடி ஆழ கிணற்றில், 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மற்றும் 1 வயது குட்டி யானை தவறி விழுந்தன. கிணற்றில் தண்ணீர் இருந்ததால், நீரில் தத்தளித்தன.

வனத்துறையினர், பொக்லைன் இயந்திரத்தால் கிணற்றின் ஒரு புறத்தை தோண்டி அதன் வழியாக யானைகளை வெளியேற்ற முயன்றனர். ஆனால், தாய் யானை மற்றும் கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் கிணற்றின் அருகே நின்று இடையூறு செய்தன.

அதனால், யானைகளை பட்டாசு வெடித்து, வேறு பகுதிக்கு விரட்டிவிட்டு, கிணற்றின் ஒரு கரையில், சாய்வாக பாதை ஏற்படுத்தினர். அதன் வழியாக அதிகாலை, 4:00 மணிக்கு, முதலில் ஆண் யானை மேலே வந்தது.

குட்டி யானை மேலே வர முயற்சித்தபோது, தாய் யானை வந்து, அதை பத்திரமாக மீட்டு, ஜவளகிரி வனத்திற்குள் அழைத்துச் சென்றது.






      Dinamalar
      Follow us