sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்

/

சாலையில் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஏப் 03, 2024 02:09 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே, சாலையில் உலா வந்த யானையால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிகமாக உள்ளன. இவை அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, குந்துக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உலா வந்தது.

இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கிராம மக்கள் சத்தம் போட்டனர். ஆக்ரோஷமடைந்த யானை, மக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்ட துவங்கியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சாலையில் உலா வந்த ஒற்றை யானை, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின் அவ்வழியாக வாகன போக்குவரத்து துவங்கியது.






      Dinamalar
      Follow us