/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரியி்ல 18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்
/
கி.கிரியி்ல 18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்
கி.கிரியி்ல 18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்
கி.கிரியி்ல 18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 19, 2025 01:07 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி துவங்கி, 18 மாதங்கள் முடிந்த போதும், பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதனால் வாகன ஓட்டிகள் திக்கி திணறி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் தினமும், 70,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. விடுமுறை நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை செல்லும். வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் உள்ள ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், 6 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு அக்., மாதம் தேசிய நெடுஞ்சாலைத்துறை துவங்கியது.
இதில், சாமல்பள்ளம் பகுதியில் மட்டும் பணி முடிவடைந்துள்ளது. மற்ற, 5 இடங்களிலும் மந்த கதியில் பணிகள் நடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பால வேலைகள் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட, 18 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால், 12 மாதத்தில் பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
பணிகள் முடியாத நிலையில் கடந்த பிப்., மாதத்திற்குள் முடித்து விடுவதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை, 5 பால பணிகளும் முடியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வந்துள்ளதால், கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் பலர் நேற்று படையெடுத்தனர். அதனால், மேம்பால வேலை நடக்கும் கோபசந்திரம் பகுதியில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முடங்கி, 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல, 30 நமிடங்கள் வரை ஆனதால், வாகன ஓட்டிகள் வெறுப்படைந்தனர்.
டோல் கட்டணத்தை உயர்த்தி அதை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், வாகன ஓட்டிகள் சிரமத்தை மனதில் வைத்து, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தீவிரப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--