sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் 11 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் 'சீல்'

/

ஓசூரில் 11 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் 'சீல்'

ஓசூரில் 11 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் 'சீல்'

ஓசூரில் 11 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் 'சீல்'


ADDED : ஆக 29, 2024 10:36 AM

Google News

ADDED : ஆக 29, 2024 10:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் இயங்கும் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு போதிய கால அவகாசம் கொடுத்தும், 3,000 கடைகள் மட்டுமே, மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்றுள்ளன. ஆனால், 7,000 நிறுவனங்களுக்கு மேல், தொழில் உரிமம் பெறாமல் உள்ளன.

அதனால், உரிமம் பெறாத கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு, 'சீல்'வைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம், 5 கடைகள், ஓட்டல்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நேற்று, ஓசூர் எம்.ஜி., ரோட்டில் தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய ஓட்டல்கள், துணிக்கடைகள் என மொத்தம், 11 கடைகளுக்கு, மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையிலான ஊழியர்கள், 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us